«الكَرِيمُ ابْنُ الكَرِيمِ ابْنِ الكَرِيمِ ابْنِ الكَرِيمِ يُوسُفُ بْنُ يَعْقُوبَ بْنِ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ»
பாடம்: 1
இதற்கு முன்னர் உம்முடைய மூதாதையராகிய இப்ராஹீம், இஸ்ஹாக் ஆகியோர் மீது தன் அருட்பேற்றினை அவன் நிறைவு செய்தது போன்று உம் மீதும், யஅகூபின் குடும்பத்தினர் மீதும் நிறைவுசெய்வான் எனும் (12:6ஆவது) வசனத் தொடர்.
4688. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’
கண்ணியத்திற்குரியவரின் புதல்வரான கண்ணியத்திற்குரியவரின் புதல்வரான கண்ணியத்திற்குரியவரின் புதல்வர்தாம் கண்ணியத்திற்குரியவர். அவர் இப்ராஹீம் (அலை) அவர்களின் புதல்வரான யஅகூப்(அலை) அவர்களின் புதல்வரான யூசுஃப்(அலை) அவர்களேயாவார்.
என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.
அத்தியாயம்: 65