🔗

புகாரி: 4691

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

بَيْنَا أَنَا وَعَائِشَةُ أَخَذَتْهَا الحُمَّى، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَعَلَّ فِي حَدِيثٍ تُحُدِّثَ» قَالَتْ: نَعَمْ، وَقَعَدَتْ عَائِشَةُ، قَالَتْ: مَثَلِي وَمَثَلُكُمْ كَيَعْقُوبَ وَبَنِيهِ، {بَلْ سَوَّلَتْ لَكُمْ أَنْفُسُكُمْ أَمْرًا فَصَبْرٌ جَمِيلٌ، وَاللَّهُ المُسْتَعَانُ عَلَى مَا تَصِفُونَ} [يوسف: 18]


4691. ஆயிஷா (ரலி) அவர்களின் தாயார் உம்மூ ரூமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நானும் ஆயிஷாவும் வீட்டில் (அமர்ந்து கொண்டு) இருந்தபோது ஆயிஷாவுக்கு காய்ச்சல் கண்டுவிட்டது. (இதையறிந்த) நபி (ஸல்) அவர்கள், ‘(அவரைப் பற்றிப்) பேசப்பட்டு வரும் பேச்சின் காரணத்தினால் (காய்ச்சல் வந்து) இருக்கலாம்!’ என்று கூறினார்கள். நான் ‘ஆம்! (அப்படித்தான்)’ என்றேன். ஆயிஷா எழுந்து உட்கார்ந்து கொண்டு, எனக்கும் உங்களுக்கும் உரிய முன்னுதாரணம் யஃகூப் (அலை) அவர்களும் அவர்களின் பிள்ளைகளுமாவார்.

“இல்லை; உங்கள் மனம் ஒரு (பெரிய) காரியத்தை உங்களுக்குக் கவர்ச்சியாக்கிவிட்டது. எனவே, அழகான பொறுமையே (எனக்கு நன்று.) நீங்கள் புனைந்துரைப்பவற்றிலிருந்து அல்லாஹ்விடமே உதவிகோர வேண்டும்” (அல்குர்ஆன்: 12:18) என்ற வசனத்தை மேற்கோள் காட்டிக் கூறினார்கள்.

அத்தியாயம்: 65