🔗

புகாரி: 4728

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

سَأَلْتُ أَبِي: {قُلْ هَلْ نُنَبِّئُكُمْ بِالأَخْسَرِينَ أَعْمَالًا} [الكهف: 103]: هُمُ الحَرُورِيَّةُ؟ قَالَ: ” لَا هُمُ اليَهُودُ وَالنَّصَارَى، أَمَّا اليَهُودُ فَكَذَّبُوا مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَمَّا النَّصَارَى فَكَفَرُوا بِالْجَنَّةِ وَقَالُوا: لاَ طَعَامَ فِيهَا وَلاَ شَرَابَ، وَالحَرُورِيَّةُ الَّذِينَ يَنْقُضُونَ عَهْدَ اللَّهِ مِنْ بَعْدِ مِيثَاقِهِ “، وَكَانَ سَعْدٌ يُسَمِّيهِمُ الفَاسِقِينَ


பாடம் : 5 தம் செயல்களில் பெரும் இழப்பிற்கு ஆளான வர்கள் யார் என்பதை நாம் உங்களுக்கு அறிவிக்கட்டுமா என்று (நபியே!) கேளுங்கள் எனும் (18:103ஆவது) இறைவசனம்.

4728. முஸ்அப் இப்னு ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரஹ்) அறிவித்தார்

நான் என் தந்தை (ஸஅத் இப்னு அபீ வக்காஸ்) அவர்களிடம் ‘இந்த (திருக்குர்ஆன் 18:103 வது) வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள், ‘ஹரூரிய்யாக்களா? என்று கேட்டேன்.அதற்கு அவர்கள், ‘(ஹரூரிய்யாக்கள்) இல்லை; யூதர்களும் கிறிஸ்தவர்களும் தாம் அவர்கள். யூதர்கள், முஹம்மத்(ஸல்) அவர்களை ஏற்க மறுத்தார்கள். கிறிஸ்தவர்களோ சொர்க்கத்தை நிராகரித்துள்ளார்கள்; அங்கு உணவோ, பானமோ கிடையாது என்று கூறினார்கள்.’ஹரூரிய்யாக்களே’, அல்லாஹ்விடம் வாக்குறுதி அளித்தபின் அல்லாஹ்வுடன் தாங்கள் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முறிப்பவர்கள் ஆவார்கள்’ என்று கூறினார்கள்.

(என் தந்தை) ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) ஹரூரிய்யாக்களை ‘பாவிகள்’ என்று குறிப்பிட்டு வந்தார்கள். (‘இறைமறுப்பாளர்கள்’ என்று கூறுவதில்லை.)

Book : 65