🔗

புகாரி: 4737

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

لَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المَدِينَةَ وَاليَهُودُ تَصُومُ يَوْمَ عَاشُورَاءَ، فَسَأَلَهُمْ، فَقَالُوا: هَذَا اليَوْمُ الَّذِي ظَهَرَ فِيهِ مُوسَى عَلَى فِرْعَوْنَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَحْنُ أَوْلَى بِمُوسَى مِنْهُمْ فَصُومُوهُ»


பாடம் : 2 நாம் மூசாவிற்கு வஹீ (செய்தி) அனுப்பினோம்: நீர்இரவோடு இரவாக என் அடியார்களை அழைத்துக் கொண்டு சென்று, கட-ல் அவர்களுக்காக உலர்ந்த பாதையை அமைப்பீராக! உம்மை யாரேனும் பின் தொடர்வார்களோ எனச் சற்றும் நீர் அஞ்சத் தேவையில்லை; (கடலைக் கடந்து செல்லும் போது) உமக்கு பயமும் ஏற்பட வேண்டிய தில்லை. ஃபிர் அவ்ன் தன் படைகளுடன் அவர்களைப் பின்தொடர்ந்தான். பிறகு அவர்களைக் கடல் எவ்வாறு மூழ்கடிக்க வேண்டுமோ அவ்வாறு மூழ்கடித்தது. ஃபிர் அவ்ன் தன்னுடைய சமுதாயத்தை வழிகெடுத்தே இருந்தான்; அவர்களுக்குச் சரியான வழியைக் காட்டியிருக்கவில்லை (எனும் 20:77-79 வசனங்கள்).

4737. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது யூதர்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளில் நோன்பு நோற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் அது பற்றி விசாரித்தார்கள். அதற்கு அவர்கள் ‘இதுதான் மூஸா(அலை) அவர்கள் ஃபிர்அவ்னை வெற்றி கொண்ட நாள்’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘இவர்களை விட மூஸா(அலை) அவர்களுக்கு நாமே அதிக உரிமையுடையவர்கள். எனவே, நீங்கள் இந்நாளில் நோன்பு வையுங்கள்’ என்று (முஸ்லிம்களுக்குக்) கூறினார்கள்.

Book : 65