4744. அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அறிவித்தார்.
(இறைமறுப்பாளர்கள் போரிட்டது தொடர்பாக) மறுமை நாளில், (அளவிலா அருளாளன்) ரஹ்மானுக்கு முன்னால் வழக்காடுவதற்காக மண்டியிடுபவர்களில் (இந்தச் சமுதாயத்திலேயே) நான்தான் முதல் ஆளாக இருப்பேன்.
அறிவிப்பாளர் கைஸ் இப்னு உபாத்(ரஹ்) கூறினார்: இவர்களைக் குறித்தே, ‘இவர்கள் தங்களின் இறைவனின் (மார்க்க) விஷயத்தில் தர்கித்துக் கொண்ட இரண்டு பிரிவினர் ஆவர்’ எனும் (திருக்குர்ஆன் 22:19 வது) இறைவசனம் அருளப்பெற்றது. அவர்கள் பத்ருப்போரின்போது (களத்தில் இறங்கி) தனித்து நின்று போராடிய (முஸ்லிம்களான) அலீ, ஹம்ஸா, உபைதா(ரலி) ஆகியோரும் (மறுப்போரான) ஷைபா இப்னு ரபீஆ, உத்பா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உத்பா ஆகியோரும் ஆவர்.
Book :65