4762. காசிம் இப்னு அபீ பஸ்ஸா(ரஹ்) அறிவித்தார்.
நான் ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அவர்களிடம், ‘இறைநம்பிக்கையாளரை வேண்டுமென்றே கொலைசெய்வதனுக்குப் பாவமன்னிப்பு உண்டா?’ என்று கேட்டுவிட்டு, ‘மேலும், (கொலை செய்யக்கூடாது என்று) அல்லாஹ் தடை விதித்துள்ள எந்த உயிரையும் நியாயமின்றி அவர்கள் கொலை செய்வதில்லை…’ எனும் (திருக்குர்ஆன் 25:68 வது) இறைவசனத்தையும் அவர்களிடம் ஓதிக் காட்டினேன். அதைக் கேட்ட ஸயீத்(ரஹ்), ‘இதே வசனத்தை நீங்கள் (என்னிடம்) ஓதிக்காட்டியது போன்றே நானும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் ஓதிக் காட்டினேன். அப்போது அவர்கள், ‘இது (திருக்குர்ஆன் 25:68) மக்காவில் அருளப்பெற்ற வசனமாகும். இ(தன் சட்டத்)தை, மதீனாவில் அருளப்பெற்ற ‘அந்நிஸா’ அத்தியாயத்திலுள்ள ஒரு வசனம் (திருக்குர்ஆன் 04:93) மாற்றிவிட்டது’ என்று பதிலளித்தார்கள்.
Book :65