🔗

புகாரி: 4801

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

صَعِدَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّفَا ذَاتَ يَوْمٍ، فَقَالَ: «يَا صَبَاحَاهْ»، فَاجْتَمَعَتْ إِلَيْهِ قُرَيْشٌ، قَالُوا: مَا لَكَ؟ قَالَ: «أَرَأَيْتُمْ لَوْ أَخْبَرْتُكُمْ أَنَّ العَدُوَّ يُصَبِّحُكُمْ أَوْ يُمَسِّيكُمْ، أَمَا كُنْتُمْ تُصَدِّقُونِي؟» قَالُوا: بَلَى، قَالَ: «فَإِنِّي نَذِيرٌ لَكُمْ بَيْنَ يَدَيْ عَذَابٍ شَدِيدٍ» فَقَالَ أَبُو لَهَبٍ: تَبًّا لَكَ، أَلِهَذَا جَمَعْتَنَا؟ فَأَنْزَلَ اللَّهُ: {تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ} [المسد: 1]


பாடம் : 2 (இறைத்தூதரான) அவரோ ஒரு கடினமான (நரக) வேதனை வருமுன் உங்களை எச்சரிக்கை செய்பவர் மட்டுமே ஆவார் (எனும் 34:46ஆவது வசனத் தொடர்).
4801. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
ஒருநாள் நபி(ஸல்) அவர்கள் ‘ஸஃபா’ மலைக்குன்றின் மீது ஏறி, ‘யா ஸபாஹா!’ (‘உதவி! உதவி! அதிகாலை ஆபத்து!’) என்று கூறினார்கள்.உடனே அவர்களை நோக்கி குறையுயர் ஒன்றுதிரண்டு வந்து, ‘உங்களுக்கு என்ன (நேர்ந்துவிட்டது)?’ என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், ‘எதிரிகள், காலையிலோ, மனைவியிலோ உங்களைத் தாக்க வருகிறார்கள் என்று நான் அறிவித்தால் என்னை நீங்கள் நம்புவீர்களா?’ என்று கேட்டார்கள். ‘ஆம் (நம்புவோம்)’ என்று அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘நான் ஒரு கடினமான (நரக) வேதனை வருமுன் உங்களை எச்சரிக்கை செய்பவனாவேன்’ என்று கூறினார்கள். உடனே அபூ லஹப், ‘உனக்கு நாசம் உண்டாகட்டும். இதைச் சொல்லத்தான் எங்களை (இங்கே) ஒன்று கூட்டினாயா?’ என்று கேட்டான். உடனே அல்லாஹ், ‘அபூ லஹபின் இரண்டு கைகளும் நாசமாகட்டும்..’ எனும் (திருக்குர்ஆன் 111:1 வது) வசனத்தை அருளினான்.
Book : 65