🔗

புகாரி: 4812

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

يَقْبِضُ اللَّهُ الأَرْضَ، وَيَطْوِي السَّمَوَاتِ بِيَمِينِهِ، ثُمَّ يَقُولُ: أَنَا المَلِكُ، أَيْنَ مُلُوكُ الأَرْضِ


பாடம் : 3 மறுமை நாளில் பூமி முழுவதும் அல்லாஹ்வின் கைப்பிடியில் இருக்கும். மேலும், வானங்கள் அவனது வலக்கரத்தில் சுருட்டப்பட்டு இருக்கும். அவர்கள் இணை வைப்பவற்றிலிருந்து அவன் தூய்மையான வன்; உயர்ந்தவன் எனும் (39:67ஆவது) வசனத் தொடர்.

4812. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(மறுமை நாளில்) அல்லாஹ் பூமியை தனது கைப்பிடிக்குள் அடக்கிக்கொள்வான், வானங்களை தனது வலக்கரத்தில் சுருட்டிக் கொள்வான், பிறகு, நானே அரசன்* எங்கே பூமியின் அரசர்கள்? என்று கேட்பான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 65