🔗

புகாரி: 4848

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

يُلْقَى فِي النَّارِ وَتَقُولُ: هَلْ مِنْ مَزِيدٍ، حَتَّى يَضَعَ قَدَمَهُ، فَتَقُولُ قَطْ قَطْ


பாடம் : 3 (நபியே!) நீங்கள் அவர்களை நோக்கி வெளியே வரும்வரையில் அவர்கள் பொறுமையுடன் இருந்திருந்தால் அது அவர்களுக்கே நலமாய் இருந்திருக்கும் எனும் (49:5ஆவது) வசனத் தொடர்.5 பாடம் : 1 இன்னும் அதிகம் இருக்கிறதா? என்று அது (நரகம்) கேட்கும் எனும் (50:30ஆவது) வசனத் தொடர்.

4848. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(நரகவாசிகள்) நரகத்தில் போடப்படுவார்கள். நரகம், (வயிறு நிரம்பாத காரணத்தால்) ‘இன்னும் அதிகம் இருக்கிறதா?’ என்று கேட்கும். இறுதியில் அல்லாஹ் தன்னுடைய பாதத்தை (அதில்) வைப்பான். அப்போது அது, ‘போதும்! போதும்!’ என்று கூறும். 2

என அனஸ்(ரலி) அறிவித்தார்.

Book : 65