اجْتَمَعَ نِسَاءُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الغَيْرَةِ عَلَيْهِ، فَقُلْتُ لَهُنَّ: عَسَى رَبُّهُ إِنْ طَلَّقَكُنَّ أَنْ يُبَدِّلَهُ أَزْوَاجًا خَيْرًا مِنْكُنَّ «فَنَزَلَتْ هَذِهِ الآيَةُ»
பாடம் : 5
நபி (தம் துணைவியராகிய) உங்களை விவாகரத்துச் செய்து விடுவாராயின், உங்களுக்கு பதிலாக உங்களைவிடவும் சிறந்த துணைவியரை அவருடைய இறைவன் அவருக்கு வழங்கிட முடியும். அவர்கள் (வாய்மையான) முஸ்லிம்களாய், இறை நம்பிக்கையுள்ளோராய், கீழ்ப்படிபவர்களாய், பாவமன்னிப்புக் கோருபவர்களாய், அடிபணிந்து வணங்குபவர்களாய், நோன்பு நோற்பவர்களாய்த் திகழ்வார்கள்; அவர்கள் விதவைகளாயும், கன்னிகளாயும் இருப்பார்கள் (எனும் 66:5ஆவது இறை வசனம்).
4916. உமர் (ரலி) அறிவித்தார்.
நபி (ஸல்) அவர்களின் துணைவியர் அனைவரும் சேர்ந்துகொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வைராக்கியமாக நடந்து கொண்டபோது, ‘நபி (ஸல்) அவர்கள் உங்களை விவாக விலக்குச் செய்தால் உங்களைவிடவும் சிறந்த துணைவியரை உங்களுக்கு பதிலாக இறைவன் அவர்களுக்குத் தர முடியும்’ என்று சொன்னேன். அப்போது (நான் கூறியவாறு) இந்த (திருக்குர்ஆன் 66:5 வது) இறைவசனம் அருளப்பட்டது. 8
Book : 65