🔗

புகாரி: 4927

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا نَزَلَ عَلَيْهِ الوَحْيُ حَرَّكَ بِهِ لِسَانَهُ – وَوَصَفَ سُفْيَانُ – يُرِيدُ أَنْ يَحْفَظَهُ» فَأَنْزَلَ اللَّهُ: {لاَ تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ} [القيامة: 16]


பாடம் : 1 (நபியே!) இந்த வஹீயை (வேத அறிவிப்பை) அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக உங்கள் நாவை அசைக்காதீர்கள் (எனும் 75:16ஆவது இறைவசனம்). இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (75:36ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) சுதா எனும் சொல்லுக்கு, வெறுமனே என்று பொருள். (75:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) – யஃப்ஜுர அமாமஹு (எதிர்காலத்திலும் தீமை செய்து கொண்டேயிருக்கவேண்டும் என்று விரும்புகிறான்) என்பதற்கு, வெகு விரைவில் பாவமன்னிப்புக் கோருவேன்; நல்லறங்கள் புரிவேன் என்று சொல்லிக் கொண்டே பாவங்களைச் செய்ய விரும்புகிறான்என்று பொருள். (75:11ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) லா வஸர எனும் சொல்லுக்கு, எந்தப் புக-டமும் இருக்காதுஎன்று பொருள்.

4927. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

தம் மீது ‘வஹீ’ (வேத அறிவிப்பு) அருளப்படும்போது, நபி(ஸல்) அவர்கள் (தாம் இதனை எங்கே மறந்துவிடப் போகிறோமோ என்ற அச்சத்தினால் வேக வேகமாக ஓதி,) தம் நாவை அசைப்பவர்களாக இருந்தார்கள். -அருளப்படும் வேத வசனங்களை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு தம் நாவை அசைத்து ஓதினார்கள் என சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்கள்- அப்போது, ‘(நபியே!) இந்த வஹீயை (வேத அறிவிப்பை) அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக உங்கள் நாவை அசைக்காதீர்கள்’ எனும் (திருக்குர்ஆன் 75:16 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். 2

Book : 65