🔗

புகாரி: 4976

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

سَأَلْتُ أُبَيَّ بْنَ كَعْبٍ عَنِ المُعَوِّذَتَيْنِ؟ فَقَالَ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «قِيلَ لِي فَقُلْتُ» فَنَحْنُ نَقُولُ كَمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


4976. ஸிர்ரு இப்னு ஹுபைஷ் (ரஹ்) அறிவித்தார்

நான் உபை இப்னு கஅப் (ரலி) அவர்களிடம் ‘முஅவ்வஃதத்தைனி’ (பாதுகாப்புக் கோரும் பிரார்த்தனைகளான 113, 114 வது அத்தியாயங்கள் குர்ஆனில் கட்டுப்பட்டவையா? என்பது) பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:

இது குறித்து நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘என்னிடம் (நபியே!) கூறுக: நான் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று) கூறப்பட்டது. நானும் கூறினேன்’ என்று கூறினார்கள்.

(அறிவிப்பாளர் ஸிர்ருபின் ஹுபைஷ்(ரஹ்) கூறினார்:)

எனவே, நாங்களும் (நானும் உபை இப்னு கஅபும்) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே சொல்வோம். 2

Book :65