🔗

புகாரி: 4999

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

لاَ أَزَالُ أُحِبُّهُ، سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «خُذُوا القُرْآنَ مِنْ أَرْبَعَةٍ مِنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، وَسَالِمٍ، وَمُعَاذِ بْنِ جَبَلٍ، وَأُبَيِّ بْنِ كَعْبٍ»


பாடம் : 8

நபித்தோழர்களில் குர்ஆன் அறிஞர்கள்27

4999. மஸ்ரூக் இப்னு அஜ்தஉ (ரஹ்) அறிவித்தார்

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) குறித்து அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) கூறுகையில், ‘நான் என்றென்றும் அவர்களை நேசிப்பேன்; (ஏனெனில்,) நபி (ஸல்), அவர்கள், அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், சாலிம், முஆத் இப்னு ஜபல், உபை இப்னு கஅப் ஆகிய நால்வரிடமிருந்தும் குர்ஆனை (ஓதக்) கற்றுக் கொள்ளுங்கள்’ என்று கூறக் கேட்டுள்ளேன்’ என்றார்கள். 28

Book : 66