🔗

புகாரி: 5004

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

مَاتَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ يَجْمَعِ القُرْآنَ غَيْرُ أَرْبَعَةٍ: أَبُو الدَّرْدَاءِ، وَمُعَاذُ بْنُ جَبَلٍ، وَزَيْدُ بْنُ ثَابِتٍ، وَأَبُو زَيْدٍ ” قَالَ: «وَنَحْنُ وَرِثْنَاهُ»


5004. அனஸ் (ரலி) அறிவித்தார்

இந்த நால்வரைத் தவிர வேறு எவரும் (குர்ஆனைக் கேட்டுத்) திரட்டியிராத நிலையில் நபி (ஸல்) அவர்கள் இறந்தார்கள்

(அந்த நால்வர்:)

1. அபுத்தர்தா (ரலி) . 2. முஆத் இப்னு ஜபல் (ரலி) . 3. ஸைத் இப்னு ஸாபித் (ரலி) . 4. அபூ ஸைத் (ரலி) ஆவர்.

நாங்களே (என் தந்தையின் சகோதரர்களில் ஒருவரான) அபூ ஸைத் (ரலி) அவர்களுக்கு வாரிசானோம். (அன்னாருக்கு வேறு வாரிசுகள் இல்லை.)

Book :66