🔗

புகாரி: 5048

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«يَا أَبَا مُوسَى لَقَدْ أُوتِيتَ مِزْمَارًا مِنْ مَزَامِيرِ آلِ دَاوُدَ»


பாடம் : 31 இனிய குரலில் குர்ஆனை ஓதுதல்.

5048. அபூ மூஸா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் (நான் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதைப் பாராட்டி) ‘அபூ மூஸா! (இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த (சங்கீதம் போன்ற) இனிய குரல் உங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது’ என என்னிடம் கூறினார்கள்.

Book : 66