🔗

புகாரி: 5110

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُنْكَحَ المَرْأَةُ عَلَى عَمَّتِهَا، وَالمَرْأَةُ وَخَالَتُهَا»
فَنُرَى خَالَةَ أَبِيهَا بِتِلْكَ المَنْزِلَةِ،


5110. அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்:

(ஒருவர்) ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும், ஒரு பெண்ணையும் அவளுடைய தாயின் சகோதரியையும் (ஒருசேர) மணமுடிப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

(அறிவிப்பாளர் ஸுஹ்ரீ (ரஹ்) கூறினார்கள்:) இதை வைத்து, ஒரு பெண்ணுடைய தாயின் சகோதரியைப் போன்றே, அவளுடைய தந்தையின் தாயுடைய சகோதரியையும் நாங்கள் கருதுகிறோம்.

அத்தியாயம்: 67