أَنَّ امْرَأَةً أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَعَرَضَتْ عَلَيْهِ نَفْسَهَا، فَقَالَ: «مَا لِي اليَوْمَ فِي النِّسَاءِ مِنْ حَاجَةٍ» فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ زَوِّجْنِيهَا، قَالَ: «مَا عِنْدَكَ؟» قَالَ: مَا عِنْدِي شَيْءٌ، قَالَ: «أَعْطِهَا وَلَوْ خَاتَمًا مِنْ حَدِيدٍ» قَالَ: مَا عِنْدِي شَيْءٌ، قَالَ: «فَمَا عِنْدَكَ مِنَ القُرْآنِ؟» قَالَ: كَذَا وَكَذَا، قَالَ: «فَقَدْ مَلَّكْتُكَهَا بِمَا مَعَكَ مِنَ القُرْآنِ»
5141. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்
ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, தன்னை மணந்து கொள்ளுமாறு வேண்டினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘இப்போது எனக்கு (மணப்) பெண் தேவையில்லை’ எனக் கூறினார்கள். அப்போது ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே! இவளை எனக்கு மணமுடித்து வையுங்கள்’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘உம்மிடம் (மஹ்ர் செலுத்த) என்ன உள்ளது?’ என்று கேட்டார்கள். அவர், ‘என்னிடம் எதுவுமில்லை” என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘இரும்பாலான மோதிரத்தையேனும் இவளுக்கு (மஹ்ராகக்) கொடு!” என்று கூறினார்கள். அவர், ‘என்னிடம் ஏதுமில்லை!” என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள், ‘சரி, குர்ஆனில் ஏதேனும் உம்மிடம் (மனனமாய்) உள்ளதா?’ என்று கேட்டார்கள். அவர், ‘இன்னது இன்னது (மனனமாய்) உள்ளதா?’ என்று கேட்டார்கள். அவர், ‘இன்னது இன்னது (மனனமாய்) உள்ளது” என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘உம்முடனுள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு மணமுடித்துக் கொடுத்துவிட்டேன்” என்று கூறினார்கள். 82
Book :67