🔗

புகாரி: 516

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

كَانَ يُصَلِّي وَهُوَ حَامِلٌ أُمَامَةَ بِنْتَ زَيْنَبَ بِنْتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلِأَبِي العَاصِ بْنِ رَبِيعَةَ بْنِ عَبْدِ شَمْسٍ فَإِذَا سَجَدَ وَضَعَهَا، وَإِذَا قَامَ حَمَلَهَا»


பாடம் : 106 தொழும் போது ஒரு சிறுமியை தமது தோளில் தூக்கி ஒருவர் சுமந்தால்…? 

516. அபூ கதாதா அல்அன்ஸாரி(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தங்களின் மகள் ஸைனப் அவர்களின் குழந்தை ‘உமாமா’வைத் (தோளில்) சுமந்த நிலையில் தொழுதிருக்கிறார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லும்போது இறக்கி விடுவார்கள். நிற்கும்போது தூக்கிக் கொள்வார்கள்.
Book : 8