🔗

புகாரி: 5386

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«مَا عَلِمْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكَلَ عَلَى سُكْرُجَةٍ قَطُّ، وَلاَ خُبِزَ لَهُ مُرَقَّقٌ قَطُّ، وَلاَ أَكَلَ عَلَى خِوَانٍ قَطُّ» قِيلَ لِقَتَادَةَ: فَعَلاَمَ كَانُوا يَأْكُلُونَ؟ قَالَ: «عَلَى السُّفَرِ»


5386. அனஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் பெரிய வட்டிலில் (ஸஹனில்) வைத்து (உணவு) உண்டதை ஒருபோதும் நான் அறிந்ததில்லை. அவர்களுக்காக ஒருபோதும் மிருதுவான ரொட்டி தயாரிக்கப்பட்டதில்லை. மேலும், அவர்கள் உணவு மேசையில் (அமர்ந்து) ஒருபோதும் சாப்பிட்டதில்லை.

இதன் அறிவிப்பாளரான கத்தாதா(ரஹ்) அவர்களிடம், ‘அப்படியென்றால், அவர்கள் எதில் அமர்ந்து உண்டுவந்தார்கள்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘உணவு விரிப்பில்’ என்று பதிலளித்தார்கள்.

Book :70