🔗

புகாரி: 539

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَأَرَادَ المُؤَذِّنُ أَنْ يُؤَذِّنَ لِلظُّهْرِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَبْرِدْ» ثُمَّ أَرَادَ أَنْ يُؤَذِّنَ، فَقَالَ لَهُ: «أَبْرِدْ» حَتَّى رَأَيْنَا فَيْءَ التُّلُولِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ شِدَّةَ الحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ، فَإِذَا اشْتَدَّ الحَرُّ فَأَبْرِدُوا بِالصَّلاَةِ»

وَقَالَ ابْنُ عَبَّاسٍ: «(تَتَفَيَّأُ) تَتَمَيَّلُ»


பாடம்: 10

பயணத்தின் போது வெப்பம் தணிந்த பின் லுஹ்ரைத் தொழுவது. 

539. அபூதர் (ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்திலிருந்தோம். முஅத்தின் லுஹருக்கு பாங்கு சொல்ல முனைந்தபோது, ‘கொஞ்சம் பொறு’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் மீண்டும் பாங்கு சொல்ல அவர் முனைந்தபோது ‘கொஞ்சம் பொறு’ என்றனர்.

மணல் திட்டுகளின் நிழலை நாங்கள் பார்க்கும் வரை (இவ்வாறு கூறி) தாமதப்படுத்தினார்கள். பிறகு அவர்கள், “கடுமையான வெப்பம், நரக வெப்பத்தின் வெளிப்பாடாகும். எனவே வெப்பம் கடுமையாகும்போது (லுஹர்) தொழுகையைத் தாமதப்படுத்துங்கள்! என்று கூறினார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “தத்தஃபய்யஉ-நிழல் படிதல் என்றால், “தத்தமய்யலு-நிழல் சாய்தல் என்ற பொருளாகும் என்று கூறினார்கள்.

அத்தியாயம்: 9