كَانَ أَبُو نَهِيكٍ رَجُلًا أَكُولًا، فَقَالَ لَهُ ابْنُ عُمَرَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ الكَافِرَ يَأْكُلُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ» فَقَالَ: فَأَنَا أُومِنُ بِاللَّهِ وَرَسُولِهِ
5395. அம்ர் இப்னு தீனார்(ரஹ்) கூறினார்
(மக்காவாசியான) அபூ நஹீக் என்பவர் அதிகம் சாப்பிடக்கூடியவராக இருந்தார். அவரிடம் இப்னு உமர்(ரலி), ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘இறை மறுப்பாளன் ஏழு குடல்களில் சாப்பிடுவான்’ என்று கூறினார்கள்’ எனக் கூறினார்கள். அதற்கு அபூ நஹீக் ‘நான் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளேன். (எனவே இதில் விதிவிலக்கு உண்டு)’ என்று கூறினார்.
Book :70