🔗

புகாரி: 5444

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

بَيْنَا نَحْنُ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جُلُوسٌ إِذَا أُتِيَ بِجُمَّارِ نَخْلَةٍ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مِنَ الشَّجَرِ لَمَا بَرَكَتُهُ كَبَرَكَةِ المُسْلِمِ» فَظَنَنْتُ أَنَّهُ يَعْنِي النَّخْلَةَ، فَأَرَدْتُ أَنْ أَقُولَ: هِيَ النَّخْلَةُ يَا رَسُولَ اللَّهِ، ثُمَّ التَفَتُّ فَإِذَا أَنَا عَاشِرُ عَشَرَةٍ أَنَا أَحْدَثُهُمْ فَسَكَتُّ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هِيَ النَّخْلَةُ»


பாடம் : 42 பேரீச்சங் குருத்தை உண்ணுதல்

5444. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார்

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது பேரீச்ச மரத்தின் குருத்து ஒன்று கொண்டுவரப்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘மரங்களில் ஒன்று உண்டு. அதன் வளம் முஸ்லிமுக்குள்ள வளத்தைப் போன்றதாகும்’ என்று கூறினார்கள். உடனே நான், ‘அவர்கள் பேரீச்ச மரத்தைத்தான் குறிப்பிடுகிறார்கள்’ என்று நினைத்தேன். எனவே, நான் ‘அது பேரீச்சம் மரம் தான், இறைத்தூதர் அவர்களே!’ என்று கூற விரும்பினேன். பிறகு (என்னுடனிருப்பவர்களைத்) திரும்பிப் பார்த்தேன். (அங்கிருந்த) பத்து பேரில் நான் பத்தாமவனாக, அவர்கள் அனைவரிலும் இளம் வயதுடையவனாக இருந்தேன். எனவே, மெளனமாம்விட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்களே, ‘அது பேரீச்ச மரம் தான்’ என்று கூறினார்கள்.63

Book : 70