أَمَرَنِي ابْنُ سِيرِينَ: أَنْ أَسْأَلَ الحَسَنَ: مِمَّنْ سَمِعَ حَدِيثَ العَقِيقَةِ؟ فَسَأَلْتُهُ فَقَالَ: «مِنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ»
5472. ஹபீப் பின் அஷ்ஷமீத் (ரஹ்) கூறினார்:
ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்களிடம், “தாங்கள் யாரிடமிருந்து அகீகா பற்றிய ஹதீஸை செவியேற்றீர்கள்” என்று கேட்கும்படி என்னை இப்னு ஸீரின் (ரஹ்) பணித்தார்கள். அவ்வாறே நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள், “ஸமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்களிடமிருந்து நான் (அகீகா பற்றிய ஹதீஸைச்) செவியேற்றேன்” என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம்: 71