«لاَ فَرَعَ وَلاَ عَتِيرَةَ»
وَالفَرَعُ: أَوَّلُ النِّتَاجِ، كَانُوا يَذْبَحُونَهُ لِطَوَاغِيتِهِمْ، وَالعَتِيرَةُ فِي رَجَبٍ
பாடம்: 3
அல்ஃபரஉ (ஆடு, அல்லது ஒட்டகத்தின் முதலாவது குட்டியைப் பலியிடுவது).
5473. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இனி), தலைக்குட்டி(யைப் பலியிடும் அறியாமைக் காலச் செய்கை)யும் இல்லை. (ரஜப் மாதத்தின் முதல் பத்து நாள்களில்) பிராணிகளைப் பலியிடுவதும் இல்லை.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(ஆடு மற்றும் ஒட்டகம் ஆகியவை ஈனும்) முதலாவது குட்டி “ஃபரஉ” ஆகும்; அதை (அறியாமைக் கால) மக்கள் தம் தெய்வச் சிலைகளுக்காகப் பலியிட்டுவந்தனர். ரஜப் மாதத்தி(ன் முதல் பத்து நாள்களி)ல் பலியிடப்படும் பிராணி “அதீரா” வாகும்.
அத்தியாயம்: 71