«مَنْ شَرِبَ الخَمْرَ فِي الدُّنْيَا، ثُمَّ لَمْ يَتُبْ مِنْهَا، حُرِمَهَا فِي الآخِرَةِ»
குடிபானங்கள்
பாடம் : 1
நம்பிக்கை கொண்டோரே! மதுபானம், சூதாட்டம், பலி பீடங்கள், குறிபார்க்கும் அம்புகள் ஆகியன ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் அடங்கும். ஆகவே, நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள் எனும் (5:90ஆவது) இறைவசனம்.
5575. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உலகில் மது அருந்திவிட்ட பிறகு (அதைக் கைவிட்டு) அதற்காகப் பாவமன்னிப்புக் கோராதவன் மறுமையில் (சொர்க்கத்தின்) மதுவை அருந்தும் பேற்றை இழந்து விடுவான்.2
என இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.
Book : 74