🔗

புகாரி: 5600

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«إِنِّي لَأَسْقِي أَبَا طَلْحَةَ وَأَبَا دُجَانَةَ وَسُهَيْلَ بْنَ البَيْضَاءِ، خَلِيطَ بُسْرٍ وَتَمْرٍ، إِذْ حُرِّمَتِ الخَمْرُ، فَقَذَفْتُهَا، وَأَنَا سَاقِيهِمْ وَأَصْغَرُهُمْ، وَإِنَّا نَعُدُّهَا يَوْمَئِذٍ الخَمْرَ» وَقَالَ عَمْرُو بْنُ الحَارِثِ: حَدَّثَنَا قَتَادَةُ، سَمِعَ أَنَسًا


பாடம் : 11 நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காய்களையும் (கனிந்த) பேரீச்சம் பழங்களையும் கலந்(து ஊற வைத்)தால் போதை தரும் என்றிருப்பின் அவ்வாறு கலக்கலாகாது என்றும், இரண்டு குழம்புகளை ஒரே குழம்பாகக் கலக்கலாகாது என்றும் கருதுவோரின் கூற்று.26

5600. அனஸ்(ரலி) கூறினார்

நான் அபூ தல்ஹா, அபூ துஜானா, சுஹைல் இப்னு பய்ளா(ரலி) ஆகியோருக்கு நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காய்கள் மற்றும் (கனிந்த) பேரீச்சம் பழங்கள் ஆகியவற்றின் கலப்பு ஊறலை ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது மது தடை செய்யப்பட்டது. உடனே நான் அதை எறிந்துவிட்டேன். நான் அவர்களுக்கு மது ஊற்றிக் கொடுப்பவனாகவும் அவர்களில் வயதில் சிறியவனாகவும் இருந்தேன். நாங்கள் அந்தக் கலவையை அன்று மதுவாகவே கருதினோம்.

மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இதே ஹதீஸ் அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுகிறது.

Book : 74