🔗

புகாரி: 5653

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

إِنَّ اللَّهَ قَالَ: إِذَا ابْتَلَيْتُ عَبْدِي بِحَبِيبَتَيْهِ فَصَبَرَ، عَوَّضْتُهُ مِنْهُمَا الجَنَّةَ ” يُرِيدُ: عَيْنَيْهِ،

تَابَعَهُ أَشْعَثُ بْنُ جَابِرٍ، وَأَبُو ظِلاَلٍ هِلاَلٌ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


பாடம்: 7

கண்பார்வை இழந்தவருக்குரிய சிறப்பு.

5653. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் கூறினான்:

நான் என் அடியானை, அவனுடைய பிரியத்திற்குரிய இரண்டு பொருட்களை(ப் பறித்து)க் கொண்டு சோதித்து, அவன் பொறுமை காப்பானேயானால், அவற்றுக்கு பதிலாக சொர்க்கத்தை நான் அவனுக்கு வழங்குவேன்.

(‘அவனுடைய பிரியத்திற்குரிய இரண்டு பொருள்கள்’ என்பது) அவரின் இரண்டு கண்களைக் குறிக்கும்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

புகாரீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியை அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து அம்ர் பின் மைஸரா அவர்கள் அறிவிப்பதைப் போன்றே அஷ்அஸ் பின் ஜாபிர், அபூளிலால்-ஹிலால் பின் மைமூன் ஆகிய இருவரும் அறிவித்துள்ளனர்.

அத்தியாயம்: 75