🔗

புகாரி: 5657

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ غُلاَمًا لِيَهُودَ، كَانَ يَخْدُمُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَمَرِضَ فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُهُ، فَقَالَ: «أَسْلِمْ» فَأَسْلَمَ وَقَالَ سَعِيدُ بْنُ المُسَيِّبِ، عَنْ أَبِيهِ: لَمَّا حُضِرَ أَبُو طَالِبٍ جَاءَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


பாடம்: 11

இறைவனுக்கு இணைவைப்போரை(ச் சந்தித்து) உடல் நலம் விசாரித்தல்.

5657. அனஸ் (ரலி) கூறினார்:

யூதர்களின் அடிமையொருவர் நபி (ஸல்) அவர்களுக்கு ஊழியம் செய்துவந்தார். அவர் நோயுற்றுவிட்டார். அவரை உடல் நலம் விசாரிக்கச் சென்ற நபி (ஸல்) அவர்கள் ‘இஸ்லாத்தை ஏற்றுக் கொள்’ என்று கூறினார்கள். அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்டார்.

முஸய்யிப் பின் ஹஸ்ன் (ரலி) கூறினார்:

(தம் பெரிய தந்தை) அபூதாலிப் அவர்களுக்கு மரண வேதனை வந்தபோது நபி (ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள்.

அத்தியாயம்: 75