🔗

புகாரி: 5689

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّهَا كَانَتْ تَأْمُرُ بِالتَّلْبِينِ لِلْمَرِيضِ وَلِلْمَحْزُونِ عَلَى الهَالِكِ، وَكَانَتْ تَقُولُ: إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ التَّلْبِينَةَ تُجِمُّ فُؤَادَ المَرِيضِ، وَتَذْهَبُ بِبَعْضِ الحُزْنِ»


பாடம் : 8 நோயாளிக்குத் தல்பீனா’ (பால் பாயசம்) தயாரித்துக் கொடுப்பது.10

5689. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார்

(என் சிறிய தாயார்) ஆயிஷா(ரலி) நோயாளிக்கும், இறந்தவரை எண்ணி வருந்துபவருக்கும் ‘தல்பீனா’ (பால் பாயசம்) தயாரித்துக் கொடுக்கும்படி பணித்துவந்தார்கள். மேலும், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘தல்பீனா நோயாளியின் உள்ளத்திற்கு ஆறுதல் அளிக்கும். கவலைகளில் சிலவற்றைப் போக்கும்’ என்று கூறக் கேட்டுள்ளேன்’ என்பார்கள்.11

Book : 76