أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: عَادَ المُقَنَّعَ ثُمَّ قَالَ: لاَ أَبْرَحُ حَتَّى تَحْتَجِمَ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ فِيهِ شِفَاءً»
5697. ஆஸிம் இப்னு உமர் இப்னி கத்தாதா(ரஹ்) கூறினார்
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) முகன்னஉ இப்னு சினான்(ரஹ்) அவர்களை உடல் நலம் விசாரிக்கச் சென்றார்கள். பிறகு, ‘நீங்கள் குருதி உறிஞ்சி எடுத்துக்கொள்ளாதவரை நான் (திரும்பிச்) செல்லமாட்டேன். ஏனெனில், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘அதில் நிவாரணம் உள்ளது’ என்று சொல்வதை கேட்டுள்ளேன்’ என்று கூறினார்கள்.
Book :76