🔗

புகாரி: 575

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّهُمْ تَسَحَّرُوا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَامُوا إِلَى الصَّلاَةِ، قُلْتُ: كَمْ بَيْنَهُمَا؟ قَالَ: قَدْرُ خَمْسِينَ أَوْ سِتِّينَ ، يَعْنِي آيَةً


பாடம்: 27

ஃபஜ்ர் தொழுகையின் நேரம். 

575. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: 

“ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஸஹர் செய்துவிட்டுப் பின்னர் (ஃபஜ்ர்) தொழுகைக்குத் தயாரானோம்” என்று கூறினார்கள்.

அப்போது நான், “ஸஹருக்கும் தொழுகைக்குமிடையே எவ்வளவு இடைவெளி இருக்கும்?” என்று கேட்டேன். அதற்கு ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், “ஐம்பது அல்லது அறுபது வசனங்கள் (ஓதும்) நேரம்” என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம்: 9