🔗

புகாரி: 5768

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

«مَنِ اصْطَبَحَ كُلَّ يَوْمٍ تَمَرَاتٍ عَجْوَةً، لَمْ يَضُرَّهُ سُمٌّ، وَلَا سِحْرٌ ذَلِكَ اليَوْمَ إِلَى اللَّيْلِ»
وَقَالَ غَيْرُهُ: «سَبْعَ تَمَرَاتٍ»


பாடம்: 52

சூனியத்திற்கு அஜ்வா’ எனும் (அடர்த்தியான உயர் ரகப்) பேரீச்சம் பழத்தை மருந்தாகப் பயன்படுத்துவது.

5768. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

தினந்தோறும் காலையில் சில ‘அஜ்வா’ ரகப் பேரீச்சம் பழங்களை (வெறும் வயிற்றில்) சாப்பிடுகிறவருக்கு எந்த விஷமும் எந்தச் சூனியமும் அன்று இரவு வரை இடரளிக்காது.

அறிவிப்பவர்: ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி)


அறிவிப்பாளர் அலீ பின் மதீனீ (ரஹ்) அவர்கள் அல்லாத மற்றவர்கள் ‘ஏழு பேரீச்சம் பழங்களை’ என்று (எண்ணிக்கைக் குறிப்புடன்) அறிவித்துள்ளார்கள்.

அத்தியாயம்: 76