🔗

புகாரி: 5837

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«نَهَانَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَشْرَبَ فِي آنِيَةِ الذَّهَبِ وَالفِضَّةِ، وَأَنْ نَأْكُلَ فِيهَا، وَعَنْ لُبْسِ الحَرِيرِ وَالدِّيبَاجِ، وَأَنْ نَجْلِسَ عَلَيْهِ»


பாடம் : 27

பட்டுத் துணியை விரிப்பாகப் பயன்படுத்துதல்.

அபீதா பின் அம்ர் அஸ்ஸல்மானீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பட்டை விரிப்பாகப் பயன்படுத்தவது, அதை அணிவதைப் போன்று(தடை செய்யப்பட்டது)தான்.

5837. ஹுதைஃபா இப்னு அல்யமான் (ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்கள் பொன் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில் பருக வேண்டாமென்றும், அவற்றில் உண்ண வேண்டாமென்றும், (ஆண்கள்) சாதாரண பட்டையும் அலங்கார பட்டையும் அணிய வேண்டாமென்றும், பட்டின் மீது அமர வேண்டாமென்றும் எங்களுக்குத் தடை விதித்தார்கள்.

Book : 77