🔗

புகாரி: 5849

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَمَرَنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِسَبْعٍ: عِيَادَةِ المَرِيضِ، وَاتِّبَاعِ الجَنَائِزِ، وَتَشْمِيتِ العَاطِسِ، وَنَهَانَا عَنْ سَبْعٍ: عَنْ لُبْسِ الحَرِيرِ، وَالدِّيبَاجِ، وَالقَسِّيِّ، وَالإِسْتَبْرَقِ، وَالمَيَاثِرِ الحُمْرِ


பாடம்: 36

சிவப்பு நிற மென்பட்டுத் திண்டு (மீஸரா).

5849. பராஉ (ரலி) அறிவித்தார்:

  1. நோயாளியை நலம் விசாரிப்பது,
  2. ‘ஜனாஸா’வைப் பின்தொடர்ந்து செல்வது,
  3. தும்மியவ(ர் அல்ஹம்துலில்லாஹ் – எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ் – அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக என்று) பதில் கூறுவது உள்ளிட்ட ஏழு விஷயங்களைக் கடைப்பிடிக்கும்படி எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

மேலும்,

  1. சாதாரணப் பட்டு,
  2. அலங்காரப் பட்டு,
  3. ‘கஸ்’ எனும் பட்டு கலந்த (எகிப்தியப்) பஞ்சாடை,
  4. தடித்த பட்டு,
  5. மென்பட்டுத் திண்டுகள் (மீஸரா) உள்ளிட்ட ஏழு பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும் எங்களுக்குத் தடை விதித்தார்கள்.

அத்தியாயம்: 77