🔗

புகாரி: 5859

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي قُبَّةٍ حَمْرَاءَ مِنْ أَدَمٍ، وَرَأَيْتُ بِلاَلًا أَخَذَ وَضُوءَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، وَالنَّاسُ يَبْتَدِرُونَ الوَضُوءَ، فَمَنْ أَصَابَ مِنْهُ شَيْئًا تَمَسَّحَ بِهِ، وَمَنْ لَمْ يُصِبْ مِنْهُ شَيْئًا، أَخَذَ مِنْ بَلَلِ يَدِ صَاحِبِهِ»


பாடம் : 42

பதனிடப்பட்ட தோலால் ஆன சிவப்பு நிறக் கூடாரம்.

5859. அபூஜுஹைஃபா ரலி அவர்கள் அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்கள் பதனிடப்பட்ட தோலால் ஆன ஒரு சிவப்பு கூடாரத்தில் இருந்தபோது நான் அவர்களிடம் சென்றேன். பிலால் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் அங்கசுத்தி (உளூ) செய்த தண்ணீரை எடுத்ததை நான் பார்த்தேன்.

மக்கள் அந்த தண்ணீருக்காக போட்டியிட்டனர். அதில் சிறிது கிடைக்கப்பெற்றவர் அதைத் (தமது மேனியில்) தடவிக்கொண்டார். அதிலிருந்து சிறிதும் கிடைக்கப்பெறாதவர் தம் தோழர் கையிலிருந்த ஈரத்தை எடுத்து (தடவி)க் கொண்டார்.