🔗

புகாரி: 5881

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عِيدٍ، فَصَلَّى رَكْعَتَيْنِ، لَمْ يُصَلِّ قَبْلُ وَلاَ بَعْدُ، ثُمَّ أَتَى النِّسَاءَ، فَأَمَرَهُنَّ بِالصَّدَقَةِ، فَجَعَلَتِ المَرْأَةُ تَصَدَّقُ بِخُرْصِهَا وَسِخَابِهَا»


பாடம் : 57

பெண்கள் கழுத்தணிகளையும் நறுமண மாலைகளையும் அணிதல்.

இது (சந்தன மாலை போன்ற) நறுமண மாலைகளைக் குறிக்கும்.

5881. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்கள் பெருநாளில் (தொழுகைத் திடலுக்குப்) புறப்பட்டு வந்து இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அதற்கு முன்பும் பின்பும் (தொழுகை எதுவும்) தொழவில்லை.

பிறகு பெண்களிடம் வந்து தர்மம் செய்யும்படி அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். உடனே பெண்கள் தங்கள் காதணிகளையும், நறுமண மாலைகளையும் (கழற்றி) தர்மமாகத் தந்தார்கள்.

Book : 77