🔗

புகாரி: 589

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أُصَلِّي كَمَا رَأَيْتُ أَصْحَابِي يُصَلُّونَ: لاَ أَنْهَى أَحَدًا يُصَلِّي بِلَيْلٍ وَلاَ نَهَارٍ مَا شَاءَ، غَيْرَ أَنْ لاَ تَحَرَّوْا طُلُوعَ الشَّمْسِ وَلاَ غُرُوبَهَا


பாடம்: 32

ஃபஜ்ர், அஸ்ர் ஆகிய தொழுகைகளுக்குப் பின்பு தவிர மற்ற எந்த நேரத்திலும் தொழலாம்.

இது குறித்து உமர் (ரலி), இப்னு உமர் (ரலி), அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் அறிவித்துள்ளனர். 

589. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தோழர்களை தொழக்கண்டது போன்றே நான் தொழுகிறேன். இரவிலும் பகலிலும் விரும்பியதைத் தொழும் எவரையும் தடுக்க மாட்டேன். எனினும் சூரியன் உதிக்கும் நேரத்தையோ மறையும் நேரத்தையோ (தொழுகைக்காக) வேண்டுமென்றே நாடாதீர்கள்!

அத்தியாயம்: 9