🔗

புகாரி: 5927

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ لَهُ إِلَّا الصَّوْمَ، فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ، وَلَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ المِسْكِ»


பாடம் : 78

கஸ்தூரி பற்றிய குறிப்பு.

5927. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(அல்லாஹ் கூறினான்:) ஆதமின் மகனுடைய (மனிதனுடைய) செயல் ஒவ்வொன்றும் அவனுக்கு உரியது; நோன்பைத் தவிர! ஏனெனில், அது எனக்குரியது. அதற்கு (நான் விரும்பிய அளவிற்கு) நானே பிரதிபலன் அளிக்கிறேன்.

(மேலும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:)

நோன்பாளியின் வாய் வாடையானது, கஸ்தூரியின் வாசனையை விட அல்லாஹ்விடம் நறுமணமிக்கதாகும்.

என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.115

Book : 77