🔗

புகாரி: 5968

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَقْبَلْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ خَيْبَرَ، وَإِنِّي لَرَدِيفُ أَبِي طَلْحَةَ وَهُوَ يَسِيرُ، وَبَعْضُ نِسَاءِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَدِيفُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذْ عَثَرَتِ النَّاقَةُ،

فَقُلْتُ: المَرْأَةَ، فَنَزَلْتُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّهَا أُمُّكُمْ» فَشَدَدْتُ الرَّحْلَ وَرَكِبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،

فَلَمَّا دَنَا، أَوْ: رَأَى المَدِينَةَ قَالَ: «آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ، لِرَبِّنَا حَامِدُونَ»


பாடம் : 102

(வாகனத்தில்) நெருங்கிய உறவுக்கார ஆணுக்குப் பின்னால் பெண் அமர்ந்து கொள்வது.

5968. அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்:

நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் கைபரிலிருந்து (மதீனாவை) நோக்கிப் புறப்பட்டோம். அபூ தல்ஹா (ரலி) சென்று கொண்டிருக்க, அவர்களுக்குப் பின்னால் நான் (வாகனத்தில்) அமர்ந்துகொண்டிருந்தேன். இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களின் வாகனத்தில்) அவர்களின் துணைவியரில் ஒருவர் (ஸஃபிய்யா) அமர்ந்து கொண்டிருந்தார்.

அப்போது (நபியவர்களின்) ஒட்டகம் இடறிவிழுந்தது. நான் ‘(அந்த ஒட்டகத்தில்) பெண் இருக்கிறாரே!’ என்று சொன்னேன். பிறகு நான் (என் வாகனத்திலிருந்து) இறங்கியதும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘இவர் உங்கள் அன்னை’ என்று கூறினார்கள். பிறகு நான் சேணத்தைக் கட்டினேன். உடனே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (ஏறிக் கொண்டு) பயணம் செய்யலானார்கள்.

மதீனாவை ‘நெருங்கியபோது’ அல்லது ‘பார்த்தபோது’ நபி (ஸல்) அவர்கள்

‘பாவமன்னிப்புக் கோரி மீண்டவர்களாக, எங்கள் இறைவனை வணங்கியவர்களாக, (அவனைப் போற்றிப்) புகழ்ந்தவர்களாக (நாங்கள் திரும்பிக் கொண்டிருக்கிறோம்)’ என்று கூறினார்கள்.142

Book : 77