🔗

புகாரி: 597

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

مَنْ نَسِيَ صَلاَةً فَلْيُصَلِّ إِذَا ذَكَرَهَا، لاَ كَفَّارَةَ لَهَا إِلَّا ذَلِكَ {وَأَقِمِ الصَّلاَةَ لِذِكْرِي} [طه: 14]


பாடம்: 37

ஒரு தொழுகையை ஒருவர் தொழ மறந்துவிட்டால் நினைவு வந்ததும் அதை அவர் தொழ வேண்டும். அந்தத் தொழுகையைத் தவிர (கூடுதலாக) வேறு எதையும் தொழ வேண்டியதில்லை.

ஒருவர் ஒரு தொழுகையைத் தொழாமல் இருபது ஆண்டு இருந்துவிட்டாலும் (விடுபட்ட) அந்தத் தொழுகையைத் தவிர வேறு எதையும் அவர் திரும்பத் தொழ வேண்டியதில்லை என இப்ராஹீம் (பின் யஸீத் அந்நகஈ – ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். 

597. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘யாரேனும் ஒரு தொழுகையை மறந்துவிட்டால் நினைவு வந்ததும் அவர் அதைத் தொழட்டும்! இதைத் தவிர அதற்கு வேறு பரிகாரம் எதுவுமில்லை.’

‘என்னைத் தியானிப்பதற்காகத் தொழுகையை நிலை நிறுத்துவீராக’ (திருக்குர்ஆன் 20:14) என்ற வசனத்தையும் ஓதிக் காட்டினார்கள். என அனஸ்(ரலி) அறிவித்தார்.

அத்தியாயம்: 9