🔗

புகாரி: 598

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

جَعَلَ عُمَرُ يَوْمَ الخَنْدَقِ يَسُبُّ كُفَّارَهُمْ، وَقَالَ: مَا كِدْتُ أُصَلِّي العَصْرَ حَتَّى غَرَبَتْ، قَالَ: فَنَزَلْنَا بُطْحَانَ، فَصَلَّى بَعْدَ مَا غَرَبَتِ الشَّمْسُ، ثُمَّ صَلَّى المَغْرِبَ


பாடம் : 38

தவறிய தொழுகைகளை முந்தையது அதற்கடுத்தது என (ஒன்றன் பின் ஒன்றாகத்) தொழுவது. 

598. ஜாபிர் (ரலி) அறிவித்தார்.

அகழ்ப்போர் தினத்தில் நிராகரிப்பவர்களை உமர் (ரலி) ஏசிக் கொண்டே வந்து ‘சூரியன் மறையும் வரை நான் அஸர் தொழ இயலவில்லை’ என்று கூறினார்கள். நாங்கள் ‘புத்ஹான்’ எனும் பள்ளத்தாக்கில் இறங்கினோம். சூரியன் மறைந்த பின் நபி (ஸல்) அவர்கள் அஸர் தொழுதுவிட்டுப் பின்னர் மக்ரிப் தொழுதார்கள்.
Book : 9