أَنَّهُ كَانَ إِذَا أَتَاهُ السَّائِلُ أَوْ صَاحِبُ الحَاجَةِ قَالَ: «اشْفَعُوا فَلْتُؤْجَرُوا، وَلْيَقْضِ اللَّهُ عَلَى لِسَانِ رَسُولِهِ مَا شَاءَ»
6027. (ஒரு சமயம்) நபி(ஸல்) அவர்கள் அமர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் ‘யாசித்தபடி’ அல்லது ‘ஒரு தேவை நிமித்தமாக’ வந்தார். நபி(ஸல்) அவர்கள் எங்களை நோக்கி ‘(இவருக்காக என்னிடம்) பரிந்துரையுங்கள். அதனால் உங்களுக்கும் நற்பலன் அளிக்கப்படும். அல்லாஹ், தான் நாடியதை தன்னுடைய தூதரின் நாவினால் நிறைவேற்றுவானாக’ என்றார்கள்.
என அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.43
Book :78