أَنَّهُ كَانَ إِذَا أَتَاهُ السَّائِلُ أَوْ صَاحِبُ الحَاجَةِ قَالَ: «اشْفَعُوا فَلْتُؤْجَرُوا، وَلْيَقْضِ اللَّهُ عَلَى لِسَانِ رَسُولِهِ مَا شَاءَ»
பாடம்: 37
யாரேனும் ஒரு நன்மையான செயலுக்குப் பரிந்துரைத்தால் அதன் நன்மையில் ஒரு பங்கு அவருக்கும் உண்டு. (அவ்வாறே) யாரேனும் ஒரு தீய செயலுக்குப் பரிந்து ரைத்தால், அதன் குற்றத்தில் அவருக்கும் ஒரு பங்குண்டு. அல்லாஹ் எல்லா பொருட் களையும் கண்காணிப்பவனாக இருக்கின் றான்’ எனும் (4:85 ஆவது) இறைவசனம்.
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கிஃப்ல்’ எனும் சொல்லுக்குப் ‘பங்கு’ என்று பொருள். ‘ ‘கிஃப்லைனி’ என்பதற்கு அபிசீனிய மொழியில் ‘இரு பலன்கள்’ என்று பொருள்’ என அபூமூசா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
6028. அபூ மூஸா (ரலி) அறிவித்தார்
‘யாசகர்’ அல்லது ‘தேவையுடையவர்’ எவரேனும் நபி (ஸல்) அவர்களிடம் வந்தால் நபியவர்கள் (தம் தோழர்களை நோக்கி, ‘இவருக்காக என்னிடம்) பரிந்துரை செய்யுங்கள். அதனால் உங்களுக்கும் நற்பலன் வழங்கப்படும்; அல்லாஹ் தன் தூதருடைய நாவினால் தான் நாடியதை நிறைவேற்றுவானாக’ என்று கூறுவார்கள்.
Book: 78