🔗

புகாரி: 603

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

ذَكَرُوا النَّارَ وَالنَّاقُوسَ، فَذَكَرُوا اليَهُودَ وَالنَّصَارَى «فَأُمِرَ بِلاَلٌ أَنْ يَشْفَعَ الأَذَانَ، وَأَنْ يُوتِرَ الإِقَامَةَ»


அத்தியாயம்: 10

பாங்கு

பாடம்: 1

பாங்கின் துவக்கம்.

அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் தொழுகைக்கு அழைத்தால், அதனை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக்கொள்கிறார்கள்; இதற்குக் காரணம் அவர்கள் அறிவில்லா மக்களாக இருப்பதேயாம். (அல்குர்ஆன்: 5:58)

இறைநம்பிக்கை கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால் வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க(ப் பள்ளிவாசலுக்கு) விரைந்து செல்லுங்கள். (அல்குர்ஆன்: 62:9)

603. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(தொழுகைக்காக மக்களை அழைப்பது பற்றி ஆலோசனை நடந்த போது) சிலர் நெருப்பை மூட்டுவோம் என்றனர். சிலர் மணி அடிப்பதன் மூலம் அழைக்கலாம் என்றனர். அவையெல்லாம் யூத, கிறித்தவ கலாச்சாரம் என்று (சிலரால் மறுத்துக்) கூறப்பட்டது.

(பிறகு பாங்கு கனவில் காட்டப்பட்டு அமலுக்கு வந்தபோது) பாங்கின் வாசகங்களை இரட்டை இரட்டையாகவும், இகாமத்தை ஒற்றைப் படையாகவும் கூறுமாறு பிலால் (ரலி) அவர்கள் ஏவப்பட்டார்கள்.

அத்தியாயம்: 10