لَمَّا قَدِمَ عَلَيْنَا عَبْدُ الرَّحْمَنِ، فَآخَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَهُ وَبَيْنَ سَعْدِ بْنِ الرَّبِيعِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ»
பாடம் : 67 (ஒப்பந்த அடிப்படையில் இருவருக்கிடையே) சகோதரத்துவத்தையும் (குலங்களிடையே) நட்புறவையும் ஏற்படுத்துவது. அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் சல்மான் அல் ஃபார்சீ (ரலி) அவர்களுக்கும் அபுத்தர்தா (ரலி) அவர் களுக்கும் இடையே சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார்கள்.96 அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நாங்கள் மதீனா வந்தபோது எனக்கும் சஅத் பின் ரபீஉ (ரலி) அவர்களுக்கும் இடையே நபி (ஸல்) அவர்கள் சகோதரத்து வத்தை ஏற்படுத்தினார்கள்.97
6082. அனஸ்(ரலி) அறிவித்தார்.
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்கள் (மதீனாவாசிகளான) எங்களிடம் (ஹிஜ்ரத் செய்து) வந்தபோது அவர்களுக்கும் ஸஅத் இப்னு ரபீஉ(ரலி) அவர்களுக்குமிடையே நபி(ஸல்) அவர்கள் சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார்கள். பிறகு (அப்துர் ரஹ்மான்(ரலி) அவர்கள் மணமுடித்துக் கொண்டபோது அவரிடம்) ‘ஓர் ஆட்டையாவது (அறுத்து) வலீமா(மணவிருந்து) கொடுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Book : 78