🔗

புகாரி: 6120

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

إِنَّ مِمَّا أَدْرَكَ النَّاسُ مِنْ كَلاَمِ النُّبُوَّةِ الأُولَى: إِذَا لَمْ تَسْتَحْيِ فَاصْنَعْ مَا شِئْتَ


பாடம் : 78 நாணம் இல்லையேல் நாடியதைச் செய்து கொள்.

6120. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

மக்கள் முந்தைய இறைத்தூதர்களின் (முது) மொழிகளிலிருந்து அடைந்து கொண்ட ஒன்றுதான். ‘உனக்கு நாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள்’ என்பதும்.

என அபூ மஸ்ஊத் உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்.

Book : 78