🔗

புகாரி: 6137

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّكَ تَبْعَثُنَا، فَنَنْزِلُ بِقَوْمٍ فَلاَ يَقْرُونَنَا، فَمَا تَرَى؟ فَقَالَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنْ نَزَلْتُمْ بِقَوْمٍ فَأَمَرُوا لَكُمْ بِمَا يَنْبَغِي لِلضَّيْفِ فَاقْبَلُوا، فَإِنْ لَمْ يَفْعَلُوا، فَخُذُوا مِنْهُمْ حَقَّ الضَّيْفِ الَّذِي يَنْبَغِي لَهُمْ»


6137. உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் ‘இறைத்தூதர் அவர்களே! தாங்கள் எங்களை ஒரு சமூகத்தாரிடம் அனுப்பி வைக்கிறீர்கள். நாங்களும் (அங்கு) சென்று அவர்களிடம் தங்குகிறோம். ஆனால், அவர்கள் எங்களை உபசரிகக மறுக்கின்றார்கள். அவ்வாறெனில், அது குறித்து தாங்கள் என்ன கருதுகின்றீர்கள்?’ என்று கேட்டோம். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களிடம், ‘நீங்கள் ஒரு சமூகத்தாரிடம் செல்ல, அவர்கள் விருந்தினர்களுக்கு வேண்டிய வசதிகளை உங்களுக்குச் செய்து தர ஏற்பாடு செய்தால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்கள் அப்படிச் செய்யவில்லையென்றால் அவர்களிடமிருந்து விருந்தினர்களான உங்களுக்குத் தேவையான விருந்தினர் உரிமையை (நீங்களே) எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று பதிலளித்தார்கள்.

Book :78