أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا يَسُوقُ بَدَنَةً، فَقَالَ: «ارْكَبْهَا» قَالَ: إِنَّهَا بَدَنَةٌ، قَالَ: «ارْكَبْهَا» قَالَ: إِنَّهَا بَدَنَةٌ، قَالَ: «ارْكَبْهَا وَيْلَكَ»
பாடம் : 95 ‘உனக்குக் கேடுதான்’ (‘வைலக்க’) என்று கூறுவது தொடர்பாக வந்துள்ளவை.179
6159. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
ஒருவர் தம் குர்பானி ஒட்டகத்தை இழுத்துக் கொண்டு (நடந்து) செல்வதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள், ‘அதில் ஏறிச் செல்லுங்கள்’ என்றார்கள். அதற்கவர் ‘இது குர்பானி ஒட்டகமாயிற்றே? என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘(பரவாயில்லை) அதில் ஏறிச் செல்லும்!’ என்றார்கள். (மீண்டும்) அவர், ‘இது குர்பானி ஒட்டகமாயிற்றே! என்றதும் ‘அதில் ஏறிச் செல்க. உமக்குக் கேடுதான். (‘வைலக்க’) என்றார்கள்.
Book : 78