🔗

புகாரி: 6166

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

وَيْلَكُمْ أَوْ وَيْحَكُمْ – قَالَ شُعْبَةُ: شَكَّ هُوَ – لاَ تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ ” وَقَالَ النَّضْرُ، عَنْ شُعْبَةَ: «وَيْحَكُمْ» وَقَالَ عُمَرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ: «وَيْلَكُمْ، أَوْ وَيْحَكُمْ


6166. (நபி (ஸல்) அவர்கள் தமது ‘விடைபெறும்’ ஹஜ் உரையில்) ‘உங்களுக்குக் கேடுதான் (வைலக்கும்)’ அல்லது ‘உங்களுக்கு அழிவுதான் (வைஹக்கும்)’. எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டிமாய்த்துக் கொள்ளும் இறை மறுப்பாளர்களாக நீங்கள் மாறிவிடாதீர்கள்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

தனது ஆசிரியரான வாகித் பின் முஹம்மத் ‘வைலக்கும்’ அல்லது ‘வைஹக்கும்’ என்று சந்தேகமாக கூறியதாக ஷுஃபா (ரஹ்) அவர்கள் கூறினார் என்று மேற்கண்ட காலித் பின் ஹாரிஸின் அறிவிப்பில்  இடம்பெற்றுள்ளது.

ஷுஃபா (ரஹ்) அவர்களிடமிருந்து நள்ரு பின் ஷுமைல் அறிவிக்கும் அறிவிப்பில் ‘வைஹக்கும்’ என்று இடம் பெற்றுள்ளது.

முஹம்மத் பின் ஸைத் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அவர்களின் மகனான உமர் பின் முஹம்மத் அவர்களின் அறிவிப்பில் ‘வைலக்கும்’ அல்லது ‘வைஹக்கும்’ என்று இடம்பெற்றுள்ளது.

(எனவே இந்த சந்தேகம் முஹம்மத் பின் ஸைத் (ரஹ்) அவர்களிடமிருந்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது)

அத்தியாயம்: 78