«سَمُّوا بِاسْمِي وَلاَ تَكْتَنُوا بِكُنْيَتِي، فَإِنَّمَا أَنَا قَاسِمٌ أَقْسِمُ بَيْنَكُمْ»
وَرَوَاهُ أَنَسٌ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
6196. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் அல் அன்சாரி (ரலி) அறிவித்தார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘என் பெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளுங்கள். ஆனால், (‘அபுல் காசிம்’ எனும்) என் குறிப்புப் பெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளாதீர்கள். ஏனெனில், நானே உங்களிடையே பங்கீடு செய்பவன் (காசிம்) ஆவேன்’ என்று கூறினார்கள். 221
இதை அனஸ் (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள்.222
அத்தியாயம் : 78